Thursday, August 15, 2013

பல்லவரும் வன்னியரும் - போதி தருமன்

பல்லவரும் வன்னியரும்

பல்லவரும் வன்னியரும்  - போதி தருமன்


வன்னியரே தமிழ்நாட்டின் க்ஷத்ரியர்கள். சேர, சோழ, பல்லவ, பாண்டிய, சாளுக்கிய மன்னர்களின் வழிவந்தவர்கள் வன்னியர்கள். அதற்கு நம்மிடம் பல ஆதாரங்கள் உண்டு.
இலக்கியம், கல்வெட்டு, நடைமுறை என்று அணைத்து ஆதாரங்களும் நம்மிடம் உண்டு. வன்னியர்கள் பயன்படுத்தும் அணைத்து பட்டங்களுக்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு.
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.
போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
7.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.
8. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
9 போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3. 28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.


சீனா கொண்டாடும் ஒரு வன்னிய இளவரசன்

சீனாவில் ஒரு தமிழனை அதுவும் ஒரு வன்னியனை கடவுளாக கொண்டாடுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அவர் தான் போதிதர்மா என்ற துறவி. போதிதர்மா பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சியில் முதலாம் கந்தவர்மன் என்ற அரசனுக்கு மூன்றாம் மகனாக பிறந்தார். அவர் இயற்பெயர் புத்தவர்ம பல்லவா. புத்த மதம் தழுவி சீனா சென்று நம் கலையான வர்மக்கலையை சீனர்களுக்கு குங்ஃபூ என்ற பெயரில் அறிமுகப்படுத்திய வன்னியர். அவரை சீன தேசமே தெய்வமாக கொண்டாடுகிறது. ஆனால் வன்னியர்களாகிய நாம் என்ன செய்தோம். அந்த சாதனை வன்னியனை மறந்துவிட்டோம்.
தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்குப் பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி). நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இக்கதையே வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்பு வன்னிய புராணம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.


இன்றைய மதிப்பு ஒரு இலட்சம் கோடி
பி.டி.செங்கல்வராயர் நாயகர் தன் திரண்டச் சொத்துக்களையெல்லாம் அறக்கட்டளையாக்கி வன்னிய மக்கள் கல்விக்காக' என உயில் எழுதி வைத்தார். எங்கள் சொத்துகள் சிலரின் ஆசை அலைகடலால் கொள்ளப்பட்டது

கோடிக்கணக்கானச் சொத்துகளை, தனக்கு பின் தன் தாயும், மனைவியும் நிர்வகித்து, பின் அவை அனைத்தும் என் வன்னிய மக்களுக்கே என்று எழுதிவைத்துச் சென்றார் கந்தசாமிக்கண்டர். அவை அவர் உயிலில் கண்டபடி உவப்பைத் தரவில்லை. கசப்பையே கண்டோம்.

தனக்கு பிறகு சொத்துகள் யாவும் வன்னிய மக்கள் வாழ்வில் வளம் காண அறக்கட்டளை அமைத்து வைகுண்டம் சென்ற ஆளவந்தார் நாயகரின் எண்ணம் முழுமையாக ஈடேறவில்லை.

கோபால் நாயகர் சேர்த்து வைத்த சொத்துகள் எங்கே என்பதே தெரியவில்லை. இப்படி மவுலிவாக்கம் சோமசுந்தர நாயகர், எட்டியப்ப நாயகர் என எண்ணற்ற பெரியவர்கள் கண்ட கல்விக் கூடங்கள், கணக்கில்லாச் சொத்துகள் எல்லாம் எங்கே?

இதுபோலவே நாடுதோறும் நகரங்களிலும் வன்னியர் சங்கம், வன்னியர் வளர்ச்சிக் கழகம், வன்னியர் மேம்பாட்டுக் கூடம், வன்னியர் பெருமன்றம் என பல்வேறு பெயர்களில் அமைந்த சொத்துகள், திருமண மண்டபங்கள், கட்டிடங்கள், தோட்டங்கள் எல்லாம் எங்கே? எவரிடத்தில்? தெரியவில்லை.

கடல் கொண்டு போனதா? வெந்தனலில் வெந்து போனதா? நொந்துபோன உள்ளத்தோடு வன்னியர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோமே ,

இந்த சொத்துகளின் இன்றைய மதிப்பு ஒரு இலட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும், இவைகளை மீட்டு எங்கள் வன்னிய மக்களுக்கு அவை பயன்படும்படி செய்திட வன்னியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம் ,

Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com

No comments:

Post a Comment