Wednesday, December 11, 2024

வன்னிய குல க்ஷத்ரியா் தினம்" . ஜீன் 13

 வன்னிய குல க்ஷத்ரியா் தினம் இன்று.

 🛕🌳🔥🔥🔥🔥🔥🌳🛕

  ஜீன் 13 − "வன்னிய குல க்ஷத்ரியா் தினம்" .

 G.O.No.271, 13th June 1929 என்கின்ற அரசாணை வழங்கும்போது தமிழ்நாடும்ஆந்திர மாநிலமும் ஒருங்கிணைந்த மெட்ராஸ் அரசாக (Government of Madras) இருந்ததுமேற்படி அரசாணை வருவதற்க்கு முன்பு வரை சென்னை மாகானத்தின் ஒரு மாவட்டமான தமிழ்நாட்டில் வன்னிய குல க்ஷத்ரியர்கள் பள்ளி மற்றும் வன்னியர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

சென்னை மாகானத்தின் ஒரு மாவட்டமாக இருந்த ஆந்திராவில் அக்னி குல க்ஷத்ரியர்கள் பள்ளி மற்றும் வன்னியர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் வன்னியர் மட்டுமே "வன்னிய குல க்ஷத்ரியர்எனவும்ஆந்திராவில் வாழ்ந்துவரும் வன்னியர் "அக்னி குல க்ஷத்ரியர்எனவும் அரசு ஆணை எண் 271 நாள் 13.6.1929ல் மதராஸ் அரசு வெளியிட்டது.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் வன்னியரே க்ஷத்ரியர் எனவும்தென்னிந்திய இராஜபுத்திரர்கள் எனவும்தமிழ்நாட்டு க்ஷத்ரியர் எனவும்தமிழ்நாட்டு இராஜபுத்திரா்கள் எனவும் அழைக்கப்படும் வரலாற்று பெருமை உடைய ஒரே இனம் நம் வன்னியகுல க்ஷத்ரிய இனமாகும்.

 

தமிழ்நாட்டில்

"வன்னிய குல க்ஷத்ரியர்"

 ஆந்திராவில்

"அக்னி குல க்ஷத்ரியர்"

கேரளாவில்

சம்பு குல க்ஷத்ரியர்

கர்நாடகாவில்

திகளர் குல க்ஷத்ரியர்

என தென்னிந்தியா முழுவதும்பெருவாரியான மக்கள் தொகையுடன் வாழ்ந்து வரும் ஒரே இனம் அக்னியில் தோன்றிய நம் இனமாகும்.

கி.பி. 08.04.1888ல் இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கம்மதராஸ் பிரசிடென்சியில்வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை "வன்னி குலோத்தாரணர்மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது.

வன்னியர்கள் (பள்ளிஎன்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்தனர்.

வன்னியர்கள் "க்ஷத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.

பின்பு நாங்களும் க்ஷத்ரியர்தான் என்று சில ஜாதிச் சங்க தலைவர்கள் நீதிமன்றத்தில் உரிமை கொண்டாடினர்போதிய ஆதாரம் இல்லாததால் இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது பிரிட்டிஷ் அரசு.

தென் இந்தியாவில் வன்னியர் மட்டுமே "க்ஷத்ரியர்என அரசாணை எண் 271/1929 கெசட்டிலும் வெளியிட்டனர்.

வன்னிய குல க்ஷத்ரியர்  என்ற நம் சாதி பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

நம் சமுதாயத்திற்கு "க்ஷத்ரியர்என்ற பட்டம் சாதரணமாக கிடைத்து விட வில்லை.

கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்விபொருளாதாரம்ஆட்சியில் உயர்ந்த நிலையில் இருந்து வந்த நாம் இடைப்பட்ட கால அந்நிய படையெடுப்புகளினாலும்நம் எதிரிகளின் சூழ்ச்சிகளினாலும் ஆட்சி அதிகாரத்தை இழந்தோம்,

நம் வரலாற்றையும்கல்வியையும் தொலைத்து 600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டோம்.

வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு கடைசியாக வந்த ஆங்கிலேயன் நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில் " பள்ளி " என்று நம்மை இணைக்க பார்த்த போது நம் குல முன்னோர்கள் கொதித்து எழுந்தனர்.

நம் சமுதாய மக்கள் எங்களை "வன்னிய குல க்ஷத்ரியர் "என்றே குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும்ஆர்பாட்டங்களும் வெடிக்க செய்தனர்.

1872 ஆம் ஆண்டு குன்னம் முனுசாமி பிள்ளை அவர்களது "ஜாதி சங்கிரச்சாரம்என்ற நூலில் வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டு இருந்தன.

காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார்.

குன்னம் முனுசாமி பிள்ளை அவர்கள் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார்.

மஹா சங்க பிரதேச காரியதரிசியாக இருந்த அய்யா காஅண்ணாசாமி நாயகர் அவர்களைக் கொண்டு " வன்னிய குல விளக்கம் " என்ற அறியதோர் ஆராய்ச்சி நூலை எழுதி அய்யா கா.கோபால் நாயக்கர் அவர்கள் சொந்த செலவில் அச்சிட்டு வெளியிட்டார்.

 

அக்காலத்தில் மஹா சங்க உள்ளூர் காரியதரிசியாயிருந்தவரும் அரசாங்க கல்விச்சாலை மேற்பார்வையாளருமான அய்யா அய்யாகண்ணு நாயக்கர் B.A. அவர்களைக் கொண்டு தமிழில் அச்சிட்டு வெளியிட்ட வன்னி குல விளக்கத்தை ஆங்கிலத்தில் எழுதும்படி செய்து அதையும் தன் சொந்த செலவில் அச்சிட்டு எல்லா கலெக்டர்களுக்கும்அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் அனுப்பி நமது மரபை வன்னிய குல க்ஷத்ரியர் என்பதை அய்யா கா.கோபால் நாயக்கர் நிலைநாட்டி சென்றார்.

அந்த ஆங்கில புத்தகத்தை கோதாவரி ஜில்லா கோரிங்கா அக்னி குல க்ஷத்ரிய சங்க தலைவர் அய்யா திருவாளர்இலட்சுமணசாமி வர்மா அவர்கள் தெலுங்கில் மொழிபெயர்த்து அவர் சொந்த செலவில் அச்சிட்டு வடநாட்டில் பரவச்செய்தார்.

பல்வேறு இலக்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும்கல்வெட்டு செய்திகளையும்வட மொழி சூத்திரங்களையும்தாமிர செப்பேடு செய்திகளையும்ஓலைச் சுவடிகளையும்சிலசாசனங்களையும்பல மாநிலங்களுக்கும்ஊர்களுக்கும் சென்று அலைந்து திரிந்து சேகரித்து மேற்கண்ட புத்தகமாக அச்சிட்டு இருந்தார்கள்.

சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவையாஎன்று சான்றுகள் பெற்று இணைத்து இருந்தனர்.

மேற்கண்ட பல நூல்கள் வடிவில் சமர்பிக்கபட்ட சான்றுகளை சரி பார்த்த ஆங்கில அரசு இறுதியில் நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று மேற்படி அரசாணை மூலம் அறிவித்தது.

வன்னியர் அல்லது பள்ளி என்போர் எல்லா ஆவணங்களிலும் வன்னிய குல க்ஷத்ரியர் " என்று குறிப்பிடலாம் என்று ஆங்கில அரசு அரசானை வெளியிட்டது.

தெலுங்கு பேசும் வன்னியர் அன்று சீமந்திரா பகுதி தமிழகத்துடன் இணைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர்,

அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர்.

மேலும் கோலார்பெங்களுர்மைசூர்பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை "திகளர் " மற்றும் "சம்பு குல க்ஷத்ரியர்கள்என்கின்றனர்.

அரசாணை வெளியீடு 1929 ஆம் ஆண்டு ஜூன்13 சென்னை மாகான சட்டதுறை மூலம் அரசாணை எண் 271ல்,

 தமிழ்நாட்டில்

வன்னிய குல க்ஷத்ரியர் "     என்றும்,

 தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில்,

அக்னி குல க்ஷத்ரியர் "

என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது.

வன்னியர்பள்ளி என்று இருந்த நம் ஜாதிப் பெயரை சுமார் 60 ஆண்டுகள் போராடி "வன்னியகுல க்ஷத்ரியர் " மற்றும் அக்னி குல க்ஷத்ரியர் என்று பெயர்களை பெற்று தந்தனர் நம் குல முன்னோர்கள்.

அன்று முதல் ஜாதிச் சான்றிதழ்களிலும்பத்திரங்களிலெல்லாம் நமது ஜாதிப்பெயரை வன்னிய குல க்ஷத்ரியர் என்று எழுத தொடங்கினார்கள்.

சரித்திர பெருமை மிக்க தென்னிந்திய ராஜபுத்திரர்களாகிய நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என அரசானை கிடைக்க பெரும் பாடுபட்ட நம் குல முன்னோர்கள் கீழ்வருமாறு.

1. வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை "வன்னி குலோத்தாரணர்அய்யா ஶ்ரீமான் கா.கோபால் நாயக்கர் அவர்கள்.

2. அக்னி குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை அய்யா P.லட்சுமண சுவாமி வர்மா அவர்கள்.

3. "வன்னிகுலோபகாரிஅய்யா புண்ணமை மு.தியாகராயர் நாயக்கர் அவர்கள்.

4. "ராவ் சாயப்அய்யா .செல்லப்ப நாயக்கர் அவர்கள்.

5. ராவ் பஹதூர் அய்யா ஆற்காடு .தனகோட்டி முதலியார்.

6. மகாநாடு அய்யா அரங்கநாத நாயக்கர் அவர்கள்.

7. மகாநாடு அய்யா .சிங்காரவேலு நாயக்கர் அவர்கள்.

8. "மஹா சங்க கேப்டன்"அய்யா தூசி.இராஜகோபால் பூபதி நாயக்கர் அவர்கள்.

9. "வன்னி குல போஷகர்அய்யா இரங்கூன் வெங்கடசாமி நாயக்கர் அவர்கள்.

10. அய்யா தி.அய்யாகண்ணு நாயக்கர் அவர்கள்.

11. அய்யா குன்னம் முனுசாமி பிள்ளை அவர்கள்.

12. " வன்னிய குல அறிஞர் " அய்யா கா.அண்ணாசாமி நாயக்கர் அவர்கள்.

13. " வன்னிய ரிஷி " அய்யா கா.ஆறுமுகம் நாயக்கர் அவர்கள்.

14. அக்னி குல க்ஷத்ரிய சங்கத்தின் பொது செயளாலர் அய்யா பிரம்மானந்த ராவ் வர்மா அவர்கள்.

15. அக்னி குல க்ஷத்ரிய சங்கத்தின் பொருளாளர் அய்யா பல்லவ கேசரி சத்திய ராஜீ அவர்கள்.

16. பாயக்காரிகளின் பாதுகாவலர் அய்யா அத்திபாக்கம் .வெங்கடாசலம் நாயக்கர் அவர்கள்.

17. வன்னிய குல க்ஷத்ரிய சமுதாய தந்தை "தேசிய கவிச்சிங்கம்" "இராஜரிஷிஅய்யா சு.அர்த்தநாரீச வர்மா நாயக்கர் அவர்கள்.

18. பல்லவ குலசேகரா் அய்யா கா.கோ.பலபத்திரா் நாயக்கர் அவர்கள்.

வன்னியர்பள்ளி என்றிருந்த நம் ஜாதிப்பெயரை வன்னிய குல க்ஷத்ரியர் என நமக்கு பெற்றுதந்த நம் முன்னோர்களை இன்று நாம் போற்றி வணங்குவதோடுநம் முன்னோர்கள் போல நாமும் நம் குல மக்களுக்கு குலப்பணியும்நன்மையும் செய்வோம்தர்மமும் செய்வோமாக.

அவர்களைப் போல் நாமும் வாழ்ந்து காட்டுவோம்.

ஓம் நமசிவாய நமஹ

🛕🛕🌳🌳🔥🙏🏻🔥🌳🌳🛕🛕

 அன்புடன்

 மஹாரிஷி ஜம்பு ஆன்மீக மஹா சபா.

 தொண்டை மண்டலம்.

Thursday, August 15, 2013

பல்லவரும் வன்னியரும் - போதி தருமன்

பல்லவரும் வன்னியரும்

பல்லவரும் வன்னியரும்  - போதி தருமன்


வன்னியரே தமிழ்நாட்டின் க்ஷத்ரியர்கள். சேர, சோழ, பல்லவ, பாண்டிய, சாளுக்கிய மன்னர்களின் வழிவந்தவர்கள் வன்னியர்கள். அதற்கு நம்மிடம் பல ஆதாரங்கள் உண்டு.
இலக்கியம், கல்வெட்டு, நடைமுறை என்று அணைத்து ஆதாரங்களும் நம்மிடம் உண்டு. வன்னியர்கள் பயன்படுத்தும் அணைத்து பட்டங்களுக்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு.
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.
போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
7.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.
8. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
9 போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3. 28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.


சீனா கொண்டாடும் ஒரு வன்னிய இளவரசன்

சீனாவில் ஒரு தமிழனை அதுவும் ஒரு வன்னியனை கடவுளாக கொண்டாடுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அவர் தான் போதிதர்மா என்ற துறவி. போதிதர்மா பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சியில் முதலாம் கந்தவர்மன் என்ற அரசனுக்கு மூன்றாம் மகனாக பிறந்தார். அவர் இயற்பெயர் புத்தவர்ம பல்லவா. புத்த மதம் தழுவி சீனா சென்று நம் கலையான வர்மக்கலையை சீனர்களுக்கு குங்ஃபூ என்ற பெயரில் அறிமுகப்படுத்திய வன்னியர். அவரை சீன தேசமே தெய்வமாக கொண்டாடுகிறது. ஆனால் வன்னியர்களாகிய நாம் என்ன செய்தோம். அந்த சாதனை வன்னியனை மறந்துவிட்டோம்.
தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்குப் பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி). நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இக்கதையே வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்பு வன்னிய புராணம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.


இன்றைய மதிப்பு ஒரு இலட்சம் கோடி
பி.டி.செங்கல்வராயர் நாயகர் தன் திரண்டச் சொத்துக்களையெல்லாம் அறக்கட்டளையாக்கி வன்னிய மக்கள் கல்விக்காக' என உயில் எழுதி வைத்தார். எங்கள் சொத்துகள் சிலரின் ஆசை அலைகடலால் கொள்ளப்பட்டது

கோடிக்கணக்கானச் சொத்துகளை, தனக்கு பின் தன் தாயும், மனைவியும் நிர்வகித்து, பின் அவை அனைத்தும் என் வன்னிய மக்களுக்கே என்று எழுதிவைத்துச் சென்றார் கந்தசாமிக்கண்டர். அவை அவர் உயிலில் கண்டபடி உவப்பைத் தரவில்லை. கசப்பையே கண்டோம்.

தனக்கு பிறகு சொத்துகள் யாவும் வன்னிய மக்கள் வாழ்வில் வளம் காண அறக்கட்டளை அமைத்து வைகுண்டம் சென்ற ஆளவந்தார் நாயகரின் எண்ணம் முழுமையாக ஈடேறவில்லை.

கோபால் நாயகர் சேர்த்து வைத்த சொத்துகள் எங்கே என்பதே தெரியவில்லை. இப்படி மவுலிவாக்கம் சோமசுந்தர நாயகர், எட்டியப்ப நாயகர் என எண்ணற்ற பெரியவர்கள் கண்ட கல்விக் கூடங்கள், கணக்கில்லாச் சொத்துகள் எல்லாம் எங்கே?

இதுபோலவே நாடுதோறும் நகரங்களிலும் வன்னியர் சங்கம், வன்னியர் வளர்ச்சிக் கழகம், வன்னியர் மேம்பாட்டுக் கூடம், வன்னியர் பெருமன்றம் என பல்வேறு பெயர்களில் அமைந்த சொத்துகள், திருமண மண்டபங்கள், கட்டிடங்கள், தோட்டங்கள் எல்லாம் எங்கே? எவரிடத்தில்? தெரியவில்லை.

கடல் கொண்டு போனதா? வெந்தனலில் வெந்து போனதா? நொந்துபோன உள்ளத்தோடு வன்னியர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோமே ,

இந்த சொத்துகளின் இன்றைய மதிப்பு ஒரு இலட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும், இவைகளை மீட்டு எங்கள் வன்னிய மக்களுக்கு அவை பயன்படும்படி செய்திட வன்னியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம் ,

Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com